திங்கள், 25 டிசம்பர், 2017

இறைநேசர்களின் சிறப்புக்களும் அவர்கள் ஆற்றிய சேவைகளும்

بسم الله الرحمن الرحيم
இறைநேசர்களின் சிறப்புக்களும் அவர்கள் ஆற்றிய சேவைகளும்
******************************************
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ 
10:62
عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم ان الله قال من عادا لي وليا فقد اذنته بالحرب  ( رواه البخاري)

இது ரபீஉல் ஆகிர் மாதம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை சிறப்பாக நினைவு கூறப்படுகிற மாதமாகும்.

ஆனால் பொதுவாக இறைநேசர்களின் மீதான பற்றையும் மரியாதயையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய அறிவுரைகளை ஞாபகப்படுத்திக் கொள்கிற மாதமாகும்.

அவனிவாழ் மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க. அல்லாஹ்வினால் அன்பளிப்பாய் வழங்கப்பட்டவர்கள்தான் அன்பியாக்கள் எனும் தீர்க்கதரிசிகளும் அவ்லியாக்கள் எனும் இறைநேசர்களும்.

நபி( ஸல்) அவர்களுடன்  நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றாலும்  அவனி தோன்றிய நாள் முதல் இறுதி கியாமத் நாள் வரையிலும் அவ்லியாக்களின் வருகை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நபிமார்களுக்குப்பின் பெரும்பாலும் வலிமார்களின் மூலமே இஸ்லாம் பரவியும் வந்துள்ளது.

வலிமார்கள் . என்றால் யார் ?
****-***************************
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ (63))

10:63 . அவர்கள் ஈமான் கொண்டு  (முழுமையாக தக்வா-) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். 10:64 .

இறைநேசர்கள் என்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தருகிற நல்லறங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத்தருகிற தீய செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொண்டிருப்பார்கள் என்று இமாம்
முல்லா அலிகாரீ (ரஹ்)  வர்கள் தங்களின் ஷரஹ்ஃபிக்ஹூல் அக்பர்  எனும் நூலில் ( பக்கம் 95 )குறிப்பிடுகிறார்கள்..

அவர்களின் அடையாளங்கள்
*********************************
وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبير، عن ابن عباس قال:
قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله".
ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا.
யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்.

حديث إبن ماجه 4109 والإمام أحمد  27601 عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ
உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி (ஸல்)கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களே என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் எவர்களை பார்த்தால் மட்டுமே அல்லாஹ்(ஆகிரத்)நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல் சொன்னார்கள் என்பதாக அஸ்மா (ரலி)அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109

ثلاث من حفظهن فهو وليي حقا ، ومن ضيعهن فهو عدوي حقا : الصلاة ، والصيام ، والجنابة
தொழுகை. நோன்பு. கடமையான குளிப்பு. ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்தாரோ அவர் என்னுடைய நேசர். யார் அதை வீணாக்கினாரோ .அவர் என்னுடைய விரோதி. என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். கன்சுல் உம்மால். பாகம்.1. பக்கம். 44

ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறிய போது ஏன் போகிறீர்கள் என ஷைகு அவர்கள் கேட்க.. இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு கராமத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கிய படி கூறினார். அப்போது ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் இமாம், ஜமாஅத்தை நான் விட்டதையோ,அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க, இல்லை என்று அவர் பதில் கூறினார். அப்போது ஷைகு அவர்கள் இதை விட பெரிய கராமத் என்ன வேண்டும் என்றார்களாம்.

நாகூர் ஷாகுல் ஹமீது (ரஹ்) அவர்கள்  தன்  வளர்ப்பு மகனுடன் மூன்று நாள் பேச வில்லை. காரணம் அவர் ஒரே ஒரு வக்தில் தக்பீர் தஹ்ரீமா தவற விட்டார் என்பதுக்காக .


அவர்களின் சிறப்புக்கள்
****************************
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيم
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.  அல்குர்ஆன்10:62.63.64

[رواه البخاري] 6021   عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

ஸஹீஹ் புகாரி:6502 .எவர் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன்.எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை.என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம்  நெருங்கி வந்து கொண்டே இருப்பான்.இறுதியில் அவனை  நான் நேசிப்பேன்.அவ்வாறு அவனை  நான் நேசித்து விடும் போது ,அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக,அவன் பற்றுகின்ற கையாக,அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன்.என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம்  நான் அவனுக்கு  பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை.அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் [மரணத்தின் மூலம்] அவருக்கு கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

192.மனிதர்களே, கேட்டுக் கொள்ளுங்கள்! விளங்கிக்கொள்ளுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! நபிமார்களோ, ஷஹீதுகளோ (வீரத்தியாகி) அல்லாத அல்லாஹுதஆலாவின் சில நல்லடியார்கள், அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட பதவியில் இருப்பர், அல்லாஹுதஆலாவுக்கும் அவர்களுக்குமுள்ள தனிப்பட்ட நெருக்கம், தொடர்பு ஆகியவற்றின் காரணமாக நபிமார்களும், ஷஹீதுகளும் அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மதீனா முனவ்வராவுக்கு வெகு தொலைவில் வசிக்கின்ற கிராமவாசி யொருவர் அச்சமயம் மதீனா வந்திருந்தார், (மக்களின் கவனத்தைத் திருப்பத்) தமது கரத்தை நபி (ஸல்) அவர்களின் பக்கம் சைகை காட்டி யாரஸூலல்லாஹ், நபிமார்களுமல்லாத, ஷஹீதுமல்லாத சிலர் அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட பதவியைப் பெற்று, அல்லாஹுதஆலாவுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட நெருக்கம், தொடர்பின் காரணமாக நபிமார்களும் ஷஹீது(உயிர்த்தியாகி)களும் பொறாமை கொள்ளும், அத்தகைய மனிதர்களுடைய தன்மைகளை விவரியுங்கள் எனக் கேட்டார். அவர் கேட்ட கேள்வியால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்படலாயின. அவர்கள் பொதுமக்களில் முன்பின் அறிமுகமில்லாத நபர்களும், பல்வேறு கோத்திரத்தைச் சார்ந்தவர்களுமாவார்கள். அவர்களுக்கிடையில் எந்த ஒரு நெருங்கிய உறவு முறையும் இருக்காது, அவர்கள் அல்லாஹுதஆலாவின் பொருத்தம், திருப்திக்காக ஒருவர் மற்றவருடன் தூய்மையான, அன்பு கொண்டவர்கள். கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா அவர்களுக்காக ஒளியினாலான மேடைகளை அமைத்து அவற்றின் மீது அவர்களை அமரவைப்பான். பிறகு அல்லாஹுதஆலா அவர்களது முகங்களையும், ஆடைகளையும் ஒளிமயமாக ஆக்கிவிடுவான். கியாமத் நாளில் பொதுமக்கள் திடுக்கத்தில் இருக்கும்போது, இவர்களுக்கு எந்தவிதத் திடுக்கமும் இருக்காது, அவர்கள் அல்லாஹுதஆலாவின் நேசர்களாவார்கள், அவர்களுக்கு பயம் இருக்காது, கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூமாலிக் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:முஸ்னத் அஹ்மத்


முக்கிய வலிமார்கள் சிலரின் வாழ்க்கைக் குறிப்பும் அவர்கள் ஆற்றிய சேவைகளும்
********************************************
இந்த நல்லடியார்கள் நமக்குஇறையச்சத்தையும் இறைத்தூதரின் மீது பற்றையும் மார்க்கத்தின் மீது பிடிப்பையும் உருவாக்கினார்கள். தாம் வாழ்ந்த காலத்தில் மக்களை நல்வழிப்டுத்த அதிக முயற்சி செய்தார்கள்.

* மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார்கள்.

* முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லிக் கொடுத்தார்கள்.

*அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வழி காட்டினார்கள்.

*சமூக சீர்திருத்தப் பணிகள் பலவற்றை திறம்படச் செய்தார்கள்.

*அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள்.

*அக்கிரமச் சக்திகளுக்கு எதிராக போராடினார்கள்.


1) முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரஹ்)
********************************
வலிமார்களுக்கெல்லாம் தலைவர் என்று போற்றப்படும் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் அபூசாலிஹ் ஸய்யித் மூஸா ( ரஹ்) உம்முல்கைர் ஃபாத்திமா ( ரஹ்) தம்பதிகளின் திருமகனாக ஹிஜ்ரி 470 ரமளான் பிறை 1. கி.பி 1078 மார்ச் 19 ம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் ஜீலான் என்ற ஊரில் பிறந்தார்கள்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்தார்கள்.  9 வயதில் குர்ஆனை மனனம் செய்தார்கள். பிறகு மேற்படிப்புக்காக பக்தாத் சென்றார்கள்.

பக்தாத் சென்ற கௌசுல் அஃலம்( ரஹ்) அவர்கள் பல்லாண்டுகள் ஹதீஸ். பிக்ஹ் கலைகளை கற்றுத் தேர்ந்தார்கள். பின்பு இறைஞானக் கல்வியை கற்க விரும்பி ஷைகு என்னும் குருவை தேடி அழைந்தார்கள்.  இறுதியில் அபுல்கைர் ஹம்மாத் ( ரலி) அவர்களின் சீடராகி மூன்று வருடங்கள் இறைஞான கல்வி கற்றார்கள்.

அவருடைய காலத்தில் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உலகில் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலம் அது. கல்வி, கலை, அறிவியல்,மருத்துவம். என முக்கியத்துறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் சிறந்து விளங்கினார்கள். மற்றவர்கள் தமது தேவைகளுக்காக முஸ்லிம் நாடுகளையே நம்பியிருந்த காலம் அது.

அங்கே இரண்டு வகையான தீமைகள் பெருகி வந்தன.

1.அறிவியல் துறையில் முன்னேறிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மார்க்கத்தின் உயிரோட்டமான ஆன்மீக சிந்தனைகளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பறிவு மேலோங்கி பக்தி குறைந்து கொண்டிருந்த்து.

2.ஆன்மீக வாதிகள் என்று அறியப்பட்டோர் ஷரீஅத்தின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த இரண்டு சூழ்நிலைகளையும் அடியோடு மாற்றினார் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

ஞானம் மிக்க அவரது உபதேசங்கள் மனித உள்ளங்களை தட்டி எழுப்பி மார்க்கத்தின் பாதைக்கு அழைத்து வந்தன.கணக்கிலடங்காதோர் அவரால் நேர் வழி பெற்றனர். அவரது உரையை கேட்க ஒரு சமயம் பக்தாது நகருக்கு 90 ஆயிரம் பேர் திரண்டதாக வரலாறு சொல்கிறது. அந்த சபையை பற்றி ஆச்சரியமூட்டும் வகையில் பேசப்படுகின்றன.ஏராளமானோர் அவரது பேச்சில் திருந்தினர்.அதனால் மக்கள் அவரை பேராசானாக போற்றினர். ஒரு முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனப் போக்கை மார்க்கத்தை நோக்கி திருப்பியதால் தான் அவர் முஹ்யுத்தீன் என்று அழைக்கப்பட்டார்.

சிக்கலுக்கு தீர்வு தந்த செம்மல்
***********************************
மாபெரும் மாமேதைகளால் கூட தீர்வு காண முடியாத பல சிக்கலான சட்டப்பிரச்சனைகளுக்கும் மகான் முஹ்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி ( ரஹ்) அவர்கள் எளிதாக தீர்ப்பு வழங்கும் திறன் பெற்றிருந்தார்கள்.

ஒரு மனிதர் விநோதமான சத்தியம் ஒன்றைச் செய்துவிட்டார்.  உலகிலே எவரும் செய்ய முடியாத வணக்கத்தை நான் நிறைவேற்றத் தவறினால் என் மனைவியை மூன்று தலாக் சொன்னவனாவேன். என்பதே அந்த சத்தியம். இது சாத்தியமாகாது எனவே அவர் மனைவி முத்தலாக்தான் என்று எல்லா மேதைகளும் தீர்ப்புக் கூறினார்கள். கடைசியாக இம்மாமேதையிடம் இக்கேள்வி வந்தது.  இதில் ஏன் தடுமாற்றம்.  அந்த மனிதனை புனித மிகு பைத்துல்லாஹ்வை தன்னந்தனியாக 7 சுற்று தவாஃப் செய்யச் சொல்லுங்கள்.  அவரது சத்தியம் நிறைவேறும் மனைவியும் தலாக் ஆகமாட்டாள் என்று உடனே பதில் சொன்னார்கள். இந்த பதிலைக் கேட்டு இராக்கின் உலமாக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். ( தவாப் செய்ய எப்போதும் நெருக்கடி இருக்கும் தன்னந்தனியாக தவாஃப் செய்வது என்பது யாரும் செய்யாத அமலாகும்.)

இவர்கள் தனது 91 ம் வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 கி.பி 1166 பிப்ரவரி 14 அன்று திங்கட்கிழமை பக்தாதில் வஃபாத் ஆனார்கள்.

2)புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள்.
*******************************************
வரலாற்று ஆசிரியர்களால்,ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்..

فضيل بن عياض، أبو على، أحد الأقطاب، ولد بخراسان، بكورة أبيورد، وقدم إلى الكوفة وهو كبير، فسمع بها الحديث. ثم تعبد وانتقل إلى مكة، وجاور بها، إلى أن مات، سنة سبع وثمانين ومائة.
وأفرد ابن الجوزى ترجمته بالتأليف.
وكان شاطراً، يقطع الطريق بين أبيورد وسرخس. وسبب توبته أنه كان يعشق جارية، فبينما هو ذات يوم يرتقى الجدران إليها، إذ سمع تالياً يتلو: )ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق( فقال: " بلى!. والله يارب! قد آن " . فرجع، فآواه الليل إلى خربة، فإذا فيها رفقة، فقال بعضهم: " نرتحل " . وقال بعضهم: " حتى نصبح، فان فضيلا على الطريق " . فآمنهم، وبات معهم.

ورجع إلى خربة فبات بها فسمع سفارا يقولون: خذوا حذركم إن فضيلا أمامكم يقطع الطريق، فأمنهم واستمر على توبته حتى كان منه ما كان من السيادة والعبادة والزهادة، ثم صار علما يقتدى به ويهتدى بكلامه وفعاله
ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள்.
ஆனால் ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள்.
பயங்கரத் திருடர்
தாரீகி திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில், இவர்களைப் பற்றி ஒரு நிகழ்வு பதியப்பட்டுள்ளது.

ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில்,அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.
எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். என்று பேசிக் கொண்டார்கள்.

தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்.
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்

வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்
இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!

ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார்.
காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ? என்றார்கள்
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.
இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம்-384

என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.

اَلَمْ يَاْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَy قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَـقَِّۙ‏ 
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?
எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்
இதோ வந்துவிட்டேன் என் இறைவா?
இதோ உருகிவிட்டேன் என் இறைவா?
இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?
என் பாவங்களை மன்னித்துவிடு! என் குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா,ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,
நூல்- ஸியரு அஃலாமின் நுபலா,   பாகம்-13, பக்கம்-59எண்-3793

3) காஜா முயீனுத்தீன் சிஷ்தி ( ரஹ்)
*******************************************
குத்புல் ஹிந்த் ( இந்தியாவின் வலிமார்களின் தலைவர்) என்று போற்றப்படும் காஜா முயீனுத்தீன் ( ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை 14 கி.பி 1116 ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை காலை குராசான் என்ற ஊரில் பிறந்தார்கள்.

சிறுவயதிலேயே தாயை இழந்த அவர்கள் தனது 15 ம் வயதில் தந்தையையும் இழந்தார்கள்.
ஷைகு உஸ்மான் ஹாரூனி அவர்களின் ஆன்மீக மாணவராகி இரண்டு ஆண்டு காலம் ஆன்மீக  கல்வி கற்றார்கள்.

பின்பு தீனை எத்திவைப்பதற்காக இந்தியா வந்தவர்கள் டெல்லியிலிருந்து அஜ்மீருக்கு சென்ற ஒரே பிரயாணத்தில் இவர்களின் ஆன்மீக உரையால் 80 ஆயிரம் நபர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

4) அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்)
*********************************
அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்கள் தம் தவமடத்தில் திங்கள்  வியாழன் தவிர ஏனைய நாட்கள் ஃபிக்ஹு, தப்ஸீர், ஹதீது
ஆகியவற்றைத் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். திங்களும், வியாழனும் லுஹர் தொழுகைக்குப்பின் நாற்காலியில்
அமர்ந்து மக்களுக்கு உபதேசம் பண்ணுவார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த  உபதேசம் கேட்டு நன்மை அடைவார்கள். ரிபாயி நாயகம் அவர்கள் தன் முரீத் அப்துஸ் ஸமீஉ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுக்கு எழுதிய அறிவுரைகள் ஹிகமுர் ரிபாயிஎன்னும் பெயருடன் விளங்குகின்றன.

இறை நேசர்களின் வாழ்வினிலிருந்து படிப்பினை
********************************************
உண்மையான முஃமின்களைப் பொருத்தவரை  அவர்களின் வாழ்வின் நோக்கம் இறைப்பொருத்தத்தைப் பெறுவது தான் எனவே நம்முடைய முன்மாதிரிகளாக இறை நேசர்கள் திகழ்கிறார்கள்....

மனிதன் படைக்கப் பட்ட நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத் தான் என படைப்பின் தத்துவத்தை மனிதகுலத்திற்கு இறை நேசர்கள் ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவ்லியாக்களின் பெயரால் அனாச்சாரங்கள்
***************************************
கப்ரு ஜியாரத் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு சுன்னத்தான செயலாகும்.
நபி( ஸல்) அவர்களும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
2304- عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ: ((اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ)). صحيح مسلم
1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், ”நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்

அதே நேரத்தில் சுன்னத்தான ஜியாரத்தை நிறைவேற்றுகின்றோம் என்ற பெயரில் ஹராம். ஷிர்க் கலந்துவிடக்கூடாது.

சில இறைநேசர்களின் அடக்கஸ்தலங்களில் ஒரு சிலர் ஜியாரத் என்ற பெயரில் இறைநேசர்களிடம் நீங்கள்தான் என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் வியாதியை குணப்படுத்தவேண்டும் என்று கேட்பதும். மண்ணரையில் காலில் விழுவதும். குழந்தைகளை கீழேபோட்டு உருட்டிவிடுவதும். தொட்டு முத்தமிடுவதும் நடைபெறுகின்றது.

சில இடங்களில் பாட்டுக்கச்சேரிகள் நடத்துவது.
மூக்கிலும் காதுகளிலும். நாவுகளிலும் வேல்குத்திக் கொள்வது போன்ற அனாச்சாரங்களும் நடைபெறுகின்றது.

இவைகளெல்லாம் தடுக்கப்பட வேண்டும் உலமாக்கள் மக்களுக்கு ஜியாரத்தினுடைய முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ்  இறைநேசர்களை மதித்து அவர்கள் செய்த சேவைகளை நாமும் செய்து நாளை மறுமை நாளில் நபிமார்கள் வலிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் தந்தருள்வானாக ! ஆமீன்