வியாழன், 18 ஏப்ரல், 2019

புதுக்கணக்கு


بسم الله الرحمن الرحيم

புதுக்கணக்கு
****************
قال الله تعالى :﴿حم (١) وَالْكِتَابِ الْمُبِينِ (٢) إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (٥) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (٦)
عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كانت لَيْلَةُُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كذآ حتى يطلع الفجر (رواه ابن ماجة)


ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்  புதுக்கணக்கு போடும் நடைமுறை இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
அகில உலகையும் படைத்து இயக்கி வரும் அல்லாஹுத்தஆலா அவன் படைப்பினங்களுக்கு புதுக்கணக்கு போடும் தினம்தான் ஷஃபான் மாதம் 15 -ஆம் நாளான பராஅத் இரவாகும்.
இன்ஷா அல்லாஹ் வரும் சனிக்கிழமை பராஅத் இரவாக இருப்பதால் அவ்விரவைப்பற்றிய சில குறிப்புகளை இங்கே காண்போம்.

இவ்விரவின் சிறப்பு பற்றி பத்து ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். எனவே இது சிறப்பான இரவென்பதில்சந்தேகமில்லை. இவ்விரவில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது பராஅத் இரவின் சிறப்பு, இரண்டாவது பராஅத் இரவின் அமல்கள்

சிறப்புகள்
+++++++++
இவ்விரவின் சிறப்பு பற்றி நேரடியாக திருக்குர்ஆன் ஆயத்துகள் எதுவுமில்லை. எனினும் சூரா துகானிலுள்ள 3,4,5 ஆயத்துகளை இவ்விரவுடன் சம்பந்தப்படுத்தி திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிலர்ஹழ்ரத் இக்ரிமா  (ரலி) மற்றும் சிலர் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி فيها يفرق كل أمر حكيم என்பதும் இவ்விரவில் நடப்பதாகக்கூறப்பட்டுள்ளது.
தப்ஸீர் ரூஹூல் மஆனியில் ஸனது இல்லாமல் ஹழ்ரத் இப்னு அப்பாஸ்  (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் ரிஜ்க், ஹயாத்,மவ்த் போன்ற விஷயங்கள் இவ்விரவில் எழுதப்பட்டு (لوح المحفوظ லிலிருந்து பிரித்தெழுதப்பட்டு )லைலத்துல் கத்ர் இரவில் அவற்றை மலக்குகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்தக்கூற்று சரியாக இருந்தால் அப்போது  إنا أنزلناه في ليلة القدر என்ற ஆயத்துக்கும்  إنا أنزلناه في ليلة مباركة என்ற ஆயத்துக்கும் மத்தியில் மேற்கண்டவாறு تطبيق செய்ய முடியும்.  (மஆரிஃபுல் குர்ஆன் 7/756-758)

ஆயத்தின் பொருள்
++++++++++++++++
قال الله تعالى :﴿حم (١) وَالْكِتَابِ الْمُبِينِ (٢) إِنَّا أَنزلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (٣) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (٤) أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ (٥) رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (٦)

ஹாமீம். தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் இவ்வேதத்தை பாக்கியமிக்க ஓர் இரவில் இறக்கிவைத்தோம்.நிச்சயமாக நாம் எச்சரிக்கை செய்பவர்களாகவே இருந்து வருகிறோம்.உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் அவ்விரவில்  (மலக்குகளிடம் )பிரித்து ஒப்படைக்கப்படுகிறது.
(அல்குர்ஆன் 44:1-4 )

இவ்விரவின் சிறப்புகளைப் பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்...
++++++++++++++++++++++++++++++++++
عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كانت لَيْلَةُُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كذآ حتى يطلع الفجر

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கிறேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன்என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள்.                   (நூல் : இப்னுமாஜா)

عَنْ عَائِشَةَ قَالَتْ: " فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ ، فَخَرَجْتُ ، فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعٌ رَأْسَهُ إِلَى السَّمَاءِ ، فَقَالَ لِي : ( أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ ؟ ) ، قَالَتْ : قُلْتُ : ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ ، فَقَالَ: ( إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعَرِ غَنَمِ كَلْبٍ)

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹு தஆலா கடைசி வானத்திற்கு இறங்கி வந்து  (அரபு தேசத்தில் உள்ள)கல்ப் கூட்டத்தாரின் ஆட்டு மந்தையிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களின் பாவங்களை மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா  (ரலி )அவர்கள் அறிவித்துள்ளார்கள்.       நூல்  (திர்மிதி )
قال رسول الله صلي الله عليه وسلم:
"ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الي رب العالمين فأحب أن يرفع عملي وانا صائم" (رواه أبو داود )

மக்கள் பொடுபோக்காக இருக்கும் ரஜபுக்கும் ரமளானுக்கும் மத்தியில் உள்ள மாதம் அது (ஷஃபான்) மக்களின் நல்லமல்கள் இம்மாதத்தில் அகிலங்களின்
இரட்சகனின் பக்கம் உயர்த்தப்படுகிறது எனவே என் நல்லமலும் நான் நோன்பு வைத்த நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல் : அபூதாவூத்)

ஷஃபான் மாதத்தில் நோன்பு தோற்பது ரமலானுக்கு அடுத்து நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு மிகவும் விருப்பமாக இருந்துள்ளது...

அமல்கள்...
++++++++
இவ்விரவில் தொழும்படியான விஷேசமான எந்தத் தொழுகையையும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத்தரவில்லை. எனவே,.    (1) தஸ்பீஹ் நஃபில், தஹஜ்ஜுத் மற்றும் இதர நஃபில் தொழுகைகளை தொழலாம். (2) கழா தொழுகைகள் இருப்பின் அவற்றை நிறைவேற்றலாம்.
(3) துஆ ஏற்கப்படும் இரவாக இருப்பதால் தமக்கும் பிறருக்கும் மரணித்தோருக்கும் துஆ செய்வதும் பாவமன்னிப்பு கேட்பதும் முக்கியம். (4) இவ்விரவில் உறவை முறித்தவர், பெற்றோரை துன்புறுத்துபவர், மதுஅருந்துபவர், விபச்சாரம் செய்பவர் ஆகியோருக்கு மன்னிப்பில்லை என்று ஹதீஸில் வந்துள்ளதால் அப்படிப்பட்டவர்கள் இவ்விரவில் அக்குற்றங்களை விட்டும் தவ்பா செய்துகொள்வது அவசியமாகும். (5) நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விரவில் கப்ரஸ்தான் சென்று துஆச் செய்துள்ளனர் என்று ஹதீஸில் வந்துள்ளதால் முடிந்தால் நாமும் அவ்வாறு செய்யலாம்.ஆனால் அதை கட்டாயமாக கருதக்கூடாது. (6) அடுத்த நாள் பகலில்  ஒரு நோன்பு வைப்பது முஸ்தஹப் ஆகும்.

இந்த இரவிலும் பாவங்கள் மன்னிக்கப் படாதவர்கள்...
********************************************

عن أبي ثعلبة الخشني " اذا كان ليلة النصف من شعبان اطلع الله الي خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع أهل الحقد بحقدهم حتي يدعوه (كنز العمال)

அபீ ஸஃலபா ஹூஷனீ அறிவித்தார்கள் " ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு முன் வந்து முஃமின்களுடைய பாவங்களை மன்னிக்கிறான் நிராகரிப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான் பொறாமைக் காரர்களை அவர்கள் அதை விடும் வரை (பாவங்களை மன்னிக்காது) விட்டு விடுகிறான்"
(நூல்: கன்ஜூல் உம்மால்)


عن أبي مُوسَى الْأَشْعَرِيِّ عن رسول الله -صلى الله عليه وسلم- قال: «إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ في لَيْلَةِ النِّصْفِ من شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خلقة إلا لِمُشْرِكٍ أو مُشَاحِنٍ»  (رواه أحمد وابن ماجه )

ஹழ்ரத் அபூமூஸா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹுத்தஆலா தனது அடியார்களில் இணைவைத்தவர்கள் ,பகைமைகொண்டவர்கள் தவிர அனைவரின் பாவங்களையும் மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                                                                           (நூல் : அஹ்மத் இப்னுமாஜா)

عن عثمان بن ابي العاص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم : " اذا كان ليلة النصف من شعبان نادي مناد هل من مستغفر فاغفر له هل من سائل فاعطيه فلا يسئل  احد شيئا إلا أعطي الا زانية بفرجها أو مشرك
(رواه البيهقي في فضائل الاوقات)

உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள் " ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் ஒரு அழைப்பாளர் அழைப்பார் உங்களில் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா அவர்களின் பாவங்களை நான் மன்னிக்கிறேன் உங்களில் (தேவையை) கேட்பவர் உண்டா அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யாரும்  ஏதும் கேட்பதில்லை (அவைகள்) கொடுக்கப்பட்டே தவிர...
விபச்சாரி தன் தொழிலுக்காக இன்னும்  இணை வைப்பாளன் கேட்பதைத் தவிர...

(நூல் : பைஹகீ)

இவ்விரவின் அமல்கள் பற்றி முந்தைய உலமாக்களின் இருவேறு கருத்துக்கள்

واختلف علماء أهل الشام في صفة إحيائها على قولين:
أحدهما: أنه يستحب إحياؤها جماعة في المساجد كان خالد بن معدان ولقمان بن عامر وغيرهما يلبسون فيها أحسن ثيابهم ويتبخرون ويكتحلون ويقومون في المسجد ليلتهم تلك ووافقهم إسحاق بن راهوية على ذلك وقال في قيامها في المساجد جماعة: ليس ببدعة نقله عنه حرب الكرماني في مسائله.
والثاني: أنه يكره الإجتماع فيها في المساجد للصلاة والقصص والدعاء ولا يكره أن يصلي الرجل فيها لخاصة نفسه وهذا قول الأوزاعي إمام أهل الشام وفقيههم وعالمهم وهذا هو الأقرب إن شاء الله تعالى.
وقد روي عن عمر بن عبد العزيز أنه كتب إلى عامله إلى البصرة عليك بأربع ليال من السنة فإن الله يفرغ فيهن الرحمة إفراغا أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الفطر وليلة الأضحى وفي صحته عنه نظر.
وقال الشافعي رضي الله عنه: بلغنا أن الدعاء يستجاب في خمس ليال: ليلة الجمعة والعيدين وأول رجب ونصف شعبان قال: وأستحب كل ما حكيت في هذه الليالي ولا يعرف للإمام أحمد كلام في ليلة نصف شعبان ويتخرج في استحباب.

ஷாம் தேசத்து உலமாக்களில் சிலர்கள் இந்த இரவில் பள்ளியில் கூடி அமல் செய்வதை மக்ரூஹ் என்றும் வேறு சில உலமாக்கள் முஸ்தஹப் என்றும் சொல்கிறார்கள்.  என்கினும் தனித்து அமல் செய்வதில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமைகள் ஏதுமில்லை.  எனவே அமல்கள் குறைந்து போன இக்காலத்தில் மக்களுக்கு இவ்விரவின் சிறப்புகளை எடுத்துக் கூறி ஆர்வப் படுத்துவது அவசியமாகும்.

ஹதீஸ் ஷரீஃபில் வருகிறது...

عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم:
"فيها ان يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم...

இந்த இரவில்தான் உலக நடைமுறைகள் அனைத்தும் முடிவு செய்யப்படுகின்றன. இவ்வாண்டு ஆதமுடைய மக்களில்  பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தையின் பெயரும் பதியப்படுகிறது. மரணிக்கப்போகும் ஒவ்வொருவரின் பெயரும் எழுதப்படுகிறது. அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகிறது இன்னும்  அவர்களின் ரிஜ்கு இறக்கி வைக்கப் ப(ட்டு  பிரிக்கப்ப)டுகிறது. (பைஹகீ )

மேலும் இவ்விரவில் நீண்ட ஆயுளுக்காகவும் துஆ கேட்கவேண்டும்
********************************
சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் ஆயுள் இருந்தால் எந்த நல்லதையும் செய்ய முடியும்.

உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான ஆசை. எந்தக் கிழவரிடம் அந்த ஆசை மட்டும் நரைப்பதில்லை.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَهْرَمُ ابْنُ آدَمَ وَيَشِبُّ مِنْهُ اثْنَتَانِ الْحِرْصُ عَلَى الْعُمُرِ وَالْحِرْصُ عَلَى الْمَالِ – ترمذي2261
நபிமார்களுக்கும் அந்த ஆசை உண்டு,
عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لَا يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَأَخَذَتْهُ بُحَّةٌ يَقُولُ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ الْآيَةَ فَظَنَنْتُ أَنَّهُ خُيِّرَ  - بخاري 4435

ஆதம் (அலை) பற்றிய ஒரு நிகழ்வு
·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ مَسَحَ ظَهْرَهُ فَسَقَطَ مِنْ ظَهْرِهِ كُلُّ نَسَمَةٍ هُوَ خَالِقُهَا مِنْ ذُرِّيَّتِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَجَعَلَ بَيْنَ عَيْنَيْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ وَبِيصًا مِنْ نُورٍ ثُمَّ عَرَضَهُمْ عَلَى آدَمَ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَرَأَى رَجُلًا مِنْهُمْ فَأَعْجَبَهُ وَبِيصُ مَا بَيْنَ عَيْنَيْهِ فَقَالَ أَيْ رَبِّ مَنْ هَذَا فَقَالَ هَذَا رَجُلٌ مِنْ آخِرِ الْأُمَمِ مِنْ ذُرِّيَّتِكَ يُقَالُ لَهُ دَاوُدُ فَقَالَ رَبِّ كَمْ جَعَلْتَ عُمْرَهُ قَالَ سِتِّينَ سَنَةً قَالَ أَيْ رَبِّ زِدْهُ مِنْ عُمْرِي أَرْبَعِينَ سَنَةً فَلَمَّا قُضِيَ عُمْرُ آدَمَ جَاءَهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ أَوَلَمْ يَبْقَ مِنْ عُمْرِي أَرْبَعُونَ سَنَةً قَالَ أَوَلَمْ تُعْطِهَا ابْنَكَ دَاوُدَ – ترمذي 3002
மூஸா (அலை)பற்றி ஒரு நிகழ்வு
·        عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ -  النسائي 2063

நீண்ட நாள் வாழ்வு என்பது இஸ்லாத்தின் பார்வையில் விரும்பத்தக்கது,
·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ ترمذي 2251


சீக்கிரம் மரணத்திற்கு ஆசைப் படக் கூடாது

أَبُو هُرَيْرَةَ - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ وَلَا يَدْعُ بِهِ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ أَحَدُكُمْ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لَا يَزِيدُ الْمُؤْمِنَ عُمْرُهُ إِلَّا خَيْرًا.

·         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ - ترمذي2252
நான் அதிகமாக நல்லதை செய்ய அதிக நாள் வாழ வேண்டும்  என்ற எண்ணம் நமது மனதில் பதியவேண்டும். ஏதோ வாழவேண்டும். எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது. அந்த ஆயுளில் பயனில்லை. அது நமக்கு பாதகமானதாக ஆக்க் கூடும்.

நாமது வாழ்நாள் முழுவதும் இந்த நபி மொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ- ترمذي 2340


எனவே விழித்து வணங்க வேண்டிய இரவுகளில் முக்கிய இரவாக இருப்பதால் இவ்விரவில் நம்மால் முடிந்த அளவுக்கு அமல்கள் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நிறைவாகப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன்!


வியாழன், 11 ஏப்ரல், 2019

தேர்தல் களமும் நம் பொறுப்பும்



بسم الله الرحمن الرحيم
தேர்தல் களமும் நம் பொறுப்பும்

முன்னுரை: உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிமையாளன் இருப்பது போல் இவ்வுலகிற்கும் ஒரு உரிமையாளன் இருக்கின்றான். அந்த உரிமையாளன் யார் என்பது குறித்து மனிதர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் அந்த உரிமையாளன் அல்லாஹ்வேயாகும். அவனைத் தவிர வேறு யாருமில்லை. இருக்கவும் முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான்
لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير (المائدة : 120)
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

அல்லாஹ்வுக்கே இவ்வுலகின் அதிகாரம் உரியது எனும் போது அவன்தான் இப்பூமியை யார் ஆளவேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அதன்படி அல்லாஹ் கூறுகின்றான்.
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (آل عمران  : 26)
(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.''

@@@@@@@
அல்லாஹ்வால் ஆட்சி, அதிகாரம் வழங்கப்படுபவர் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஃபிர்அவ்ன், நம்ரூத் மற்றும் நவீன மோடிகள் இதற்கு உதாரணங்கள்.
أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (البقرة : 258)
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)'' என்று. அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!'' என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.



@@@@@@@
இந்தியா:
இந்தியா என்பது மதச்சாற்பற்ற, ஜனநாயக நாடாகும். இந்நாட்டை முஸ்லிம்கள் 900 ஆண்டுகள் ஆண்டிருக்கின்றார்கள். மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அதன் விடுதலைக்காக போராடியவர்களில் முஸ்லிம்கள் மிக முக்கியமானவர்களாவார்கள். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம். ஆட்சிக்கு வருபவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்ய வேண்டும்.

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை :
சுதந்திர இந்தியாவில் தற்போதுள்ள சூழலில் முஸ்லிம்கள் 30 கோடிக்கும் மேல் வாழ்ந்தாலும் மன்மோகன்சிங் ஆட்சியில் முஸ்லிம்களின் நிலையை அறிந்திடும் வகையில் நீதிரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களின் தலைமையில் அமைக்கபட்ட கமிட்டியின் அறிக்கையின்படி இந்திய முஸ்லிம்கள் கல்வி, பொருளதாரம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலையிலேயே இருக்கின்றனர். அதாவது மற்றவர்கள் நம்மைப் பார்த்து பரிதாபப்படுகின்ற சூழலில்தான் முஸ்லிம்களின் வாழ்வு அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

1. முஸ்லிம்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உம். அக்லாக் படுகொலை முதலிய படுகொலைகள்.
2. முஸ்லிம்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக வடநாடுகளில் அச்சுறுத்தப்படுகின்றார்கள். உம். அசாம் வாழ் முஸ்லிம்களுக்கான குடியுரிமை ரத்து செய்வதற்கான சட்டம்.
3. கஷமீரில் வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் பல கொடுமைகள்.
4. முஸ்லிம்களின் பொருளதாரம் திட்டமிட்டே நசுக்கப்படுகின்றது. உம். மாட்டிறைச்சிக்குத் தடை, தோல் தொழிலை நசுக்கியதை குறிப்பிடலாம்.
5. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள் திட்டமிட்டே தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. பின்னர் கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு அவைகள் இந்து கோவில்களாக மாற்றப்படுதல். உம். ராமர் கோவில்.
6. முஸ்லிம்கள் தங்களின் உயிரைவிடவும் மேலாக மதிக்கின்ற இஸ்லாமிய சட்டங்கள் விமர்சிக்கப்பட்டு, அதற்கு தடைகள் போடுவது. உம். முத்தலாக் தடைச் சட்டம்.
7. முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துக்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் சித்தரிப்பது. இப்படியாக முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை அரசே முன்னின்று செயல்படுத்துகின்றது. இந்நிலையில்தான் நாம் நாடாலுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கின்றோம்.

@@@@@@@

முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் ?
முஸ்லிம்கள் இந்தியாவில் உரிமைகளைப் பெற்று வாழவேண்டுமானால் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும்.
2. அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும்.

அதிகாரங்களை கைப்பற்றுதல் என்பதன் பொருள் இந்தியாவிலுள்ள அதிகாரமிக்க மிக முக்கிய பதவிகளான.
I.A.S.I.P.S.I.F.S
போன்ற பதவிகளையும், இதர கீழ் நிலை பதவிகளையும் கைப்பற்ற வேண்டும்.

இந்த இலக்கை அடைய முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை:
1. நமது குழந்தைகளை ஆரம்ப நிலை வகுப்புக்களிலிருந்து கல்லூரி படிப்பு வரை தரமான பள்ளிக்கூடங்களில் படிக்க வைக்க வேண்டும்.
2. கல்லூரி படிப்பைத் தொடர்ந்து ஆராய்ச்சி படிப்பில் சேர்த்து, அதில் பட்டம் பெறச் செய்ய வேண்டும்.
3. இஸ்லாமிய கல்வியை முழுமையாக வழங்க வேண்டும்.
4. இதற்கு தேவையான பொருளாரத்தை பைத்துல்மால் உருவாக்கி அதன் மூலம் தேவையான நிதியை பெற முயற்சிக்கலாம். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் சமூகத்தின் நிலையை மேன்மைப்படுத்த முடியும். நம்மில் பாதிக்கப்பட்டு, சிறைபட்டோருக்கும் உதவ முடியும். (பல சமயங்களில் முஸ்லிம் அப்பாவி சிறைவாசிகளை விடுவிக்க முயற்சிக்கும் போது அதிகாரிகள் தடையாக இருந்தார்கள் என்றொரு செய்தி கேள்விபட்டதுண்டு) அதிகாரங்களை கைப்பற்றினால்தான் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை கிடைக்கச் செய்ய முடியும். முஸ்லிம் அதிகாரிகள் இல்லாததால் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முதலிய உரிமைகள் கிடைக்கப்பெறாமல் அதிகாரிகளால் எத்துனை முறை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

@@@@@@@

அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும்.

அரசியல் அதிகாரங்கள் என்று வருகின்ற போது அதனை இரு வகையாக பார்க்க வேண்டும்.
1. நீண்ட கால திட்டம்:
இத்திட்டத்தின்படி முதலாவது, நாமும், நமது சந்ததிகளும் நிம்மதியாக வாழ விகிதாச்சார பிரதிநித்துவத்தை வற்புறுத்த வேண்டும். (இதைத்தான் காயிதே மில்லத், அறிஞர் அண்ணா ஆகியோர் வலியுறுத்தினார்கள்)
விகிதாச்சார பிரதிநித்துவம் என்றால் ஒரு கட்சி பெறும் வாக்குகளின் அடிப்படையில் அதற்கான
M.L.A. M.P
வழங்கப்படுவார்கள். இந்த முறையில் எந்த ஒரு வாக்கும் வீணாகாது. உம். முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ மற்றும் ம.ம.க ஆகிய கட்சிகள் போட்டியிட்டு ஆறு இலட்சம் ஓட்டுக்களை வாங்குகிறார்கள் என்றால் ஒரு வேட்பாளருக்கு  இரண்டு இலட்சம் வீதம் ஓட்டுக்கள் என்ற அடிப்படையில் மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ கிடைப்பார்கள். மேலும் இம்முறையின்படி கட்சிகளுக்கிடையில் கூட்டணியும் அமைத்துக் கொள்ளலாம். உம். ஒரு கட்சிக்கு ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் ஓட்டுக்களும், மற்றுமொறு கட்சிக்கு இரண்டரை இலட்சம் ஓட்டுக்கள் கிடைக்கின்ற போது இருவரும் கூட்டணி அமைத்து இரண்டு எம்.எல்.ஏ க்களை பெறமுடியும். இந்த முறைதான் அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளன. இம்முறையின் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும், அவர்களின் தேவைகளை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சொல்லும் பிரதிநிதிகள் கிடைப்பார்கள்.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْناً، يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئاًالنور: 55
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ''அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;'' இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

இரண்டாவது: அரசியலில் முஸ்லிம்கள் காங்கிரஸ், தி.மு.க என்று காலம் காலமாக மற்றவர்களை சார்ந்திருப்பதை விட நமக்கென பலமிக்க கட்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின்படி முஸ்லிம்களுக்கான கட்சியாக சில கட்சிகள் இருந்தாலும் அது கேரளா மற்றும் தமிழகத்தைத் தவிர வேரெங்கும் காணப்படவில்லை.
ஆனாலும் சிலகட்சி அது சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் கால் பதித்து அசுர வளர்ச்சி பெற்று செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களின் செயல்பாடுகளும் (சில விஷயங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும்) சிறப்பாகவே செயல்படுகின்றார்கள். இதற்கு ஹாதியாவின் சம்பவம் ஒரு சான்று. இவர்களையும் நாம் ஊக்குவிக்கலாம். இதர முஸ்லிம் கட்சிகளில் அவர்கள் சில சீட்டுகளை பெற்றிருப்பினும் அவர்களிடம் வலிமையான தொண்டர்களும், தூரநோக்கு திட்டங்களும் இருப்பதாக தெரியவில்லை.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَنْ تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِي وَابْتِغَاءَ مَرْضَاتِي تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ وَمَنْ يَفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ (الْمُمْتَحَنَةِ : 1)
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
عن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةَ رَهْطٍ سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ»، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا بِالهَدَأَةِ، وَهُوَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ، ذُكِرُوا لِحَيٍّ مِنْ هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ قَرِيبًا مِنْ مِائَتَيْ رَجُلٍ كُلُّهُمْ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمْ تَمْرًا تَزَوَّدُوهُ مِنَ المَدِينَةِ، فَقَالُوا: هَذَا تَمْرُ يَثْرِبَ فَاقْتَصُّوا آثَارَهُمْ، فَلَمَّا رَآهُمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ وَأَحَاطَ بِهِمُ القَوْمُ، فَقَالُوا لَهُمْ: انْزِلُوا وَأَعْطُونَا بِأَيْدِيكُمْ ، وَلَكُمُ العَهْدُ وَالمِيثَاقُ، وَلاَ نَقْتُلُ مِنْكُمْ أَحَدًا، قَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَمِيرُ السَّرِيَّةِ: أَمَّا أَنَا فَوَاللَّهِ لاَ أَنْزِلُ اليَوْمَ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ، فَرَمَوْهُمْ بِالنَّبْلِ فَقَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةٍ، فَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ رَهْطٍ بِالعَهْدِ وَالمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ، وَابْنُ دَثِنَةَ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَأَوْثَقُوهُمْ، فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ: هَذَا أَوَّلُ الغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ إِنَّ لِي فِي هَؤُلاَءِ لَأُسْوَةً يُرِيدُ القَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ فَأَبَى فَقَتَلُوهُ، فَانْطَلَقُوا بِخُبَيْبٍ، وَابْنِ دَثِنَةَ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ خُبَيْبًا بَنُو الحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ، أَنَّ بِنْتَ الحَارِثِ أَخْبَرَتْهُ: أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا، فَأَعَارَتْهُ، فَأَخَذَ ابْنًا لِي وَأَنَا غَافِلَةٌ حِينَ أَتَاهُ قَالَتْ: فَوَجَدْتُهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالمُوسَى بِيَدِهِ، فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فِي وَجْهِي، فَقَالَ: تَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ؟ مَا كُنْتُ لِأَفْعَلَ ذَلِكَ، وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرٍ، وَكَانَتْ تَقُولُ: إِنَّهُ لَرِزْقٌ مِنَ اللَّهِ رَزَقَهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ: ذَرُونِي أَرْكَعْ رَكْعَتَيْنِ، فَتَرَكُوهُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: لَوْلاَ أَنْ تَظُنُّوا أَنَّ مَا بِي جَزَعٌ لَطَوَّلْتُهَا، اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا،
مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا ... عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ ... يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
فَقَتَلَهُ ابْنُ الحَارِثِ فَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ الرَّكْعَتَيْنِ لِكُلِّ امْرِئٍ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا، فَاسْتَجَابَ اللَّهُ لِعَاصِمِ بْنِ ثَابِتٍ يَوْمَ أُصِيبَ، «فَأَخْبَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ خَبَرَهُمْ، وَمَا أُصِيبُوا، وَبَعَثَ نَاسٌ مِنْ كُفَّارِ قُرَيْشٍ إِلَى عَاصِمٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ، لِيُؤْتَوْا بِشَيْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَدْ قَتَلَ رَجُلًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبُعِثَ عَلَى عَاصِمٍ مِثْلُ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رَسُولِهِمْ، فَلَمْ يَقْدِرُوا عَلَى أَنْ يَقْطَعَ مِنْ لَحْمِهِ شَيْئًا» خ :3045
3045. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு
உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள 'ஹத்ஆ' என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே 'இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்' என்று கூறினர். எனவே அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம்(ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர் சூழ்ந்தனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம் 'நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்' என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு' என்று பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும் இப்னு தசினா அவர்களும் மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர் 'இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு (நல்ல பாடமாக அமைந்துள்ளனர்' என்று கூறினார். உடனே அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். எனவே (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.
உபைதுல்லாஹ் இப்னு இயாள்(ரஹ்) கூறினார்கள் என அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
ஹாரிஸின் மகள் என்னிடம் கூறினார்:
குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்று கூடியபோது குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர் கையிலிலெடுத்தார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே 'நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை. ...மேலும் ஹாரிஸின் மகள் 'அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்' என்று கூறி வந்தார். (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)
(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்:)
அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் (எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து 'ஹில்' (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள்'என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்' என்று கூறினார்கள். (தொழுது முடித்து) பிறகு 'நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்' என்று கூறிவிட்டு 'இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு (ஒருவர் விடாமல்) பழி வாங்குவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். மேலும் 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள் வளத்தைப் பொழிவான்' என்று கவி பாடினார்கள். பின்னர் குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலைகுறித்து தன் தூதருக்குத் தெரிவித்து)விட்டான். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும் அவர்களுக்கு குறைஷிக்குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில் ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின்போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்காக (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.

@@@@@@@

அரசியல் அதிகாரங்கள் என்று வருகின்ற போது அதனை இரு வகையாக பார்க்க வேண்டும்.

இரண்டாவது : குறுகிய கால திட்டமாகும். இத்திட்டத்தின் படி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் மத்திய சென்னையைத் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை ஆதரிக்க வேண்டும். தி.மு.க கூட்டணிக்கான ஆதரவு என்பது அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை விட முஸ்லிம்களின் மிகப் பெரும் எதிரிகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான். இவர்கள் நமக்காக நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் குரல் கொடுக்கப் போவதில்லை. மத்திய சென்னையைப் பொறுத்த வரை அங்கு முஸ்லிம்களில் ஒருவரும், உலமாக்களில் ஒருவருமான மவ்லவி தெஹ்லான் பாகவி அவர்கள் போட்டியிடுவதால் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதன் மூலம்  மார்க்கச் சட்டம் அறிந்த, மார்க்க உணர்வுள்ள ஒருவரால் நாடாளுமன்றத்தில் நமக்கான குரலை ஒலிக்கச் செய்ய முடியும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முஸ்லிம்களை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாய நிலை திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் மற்றவர்கள் முஸ்லிம்களுக்காக சிறிய அளவில் குரல்  கொடுத்தாலும் அது பெயரளவில்தான் இருக்குமே தவிர அது உணர்வுப்பூர்வமாக இருக்காது. அவர்களுக்கு பெட்டி கொடுத்தால் பொட்டிப்பாம்பாய் அடங்கி விடுவார்கள். ஆதலால் மவ்லவியை ஆதரிக்கலாம்.

2. முஸ்லிம் தலைவர்கள், அறிஞர்கள் ஒன்றுபட வேண்டும்.

عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ المُضِلِّينَ»، ت : 2229
ஸவ்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் சமூகத்திற்கு எதிராக வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை நான் பயப்படுகின்றேன். (திர்மிதி:2229)

3. முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுபட மாட்டோம் என்பதை நம்மை விட எதிரிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் முஸ்லிம்களின் ஓட்டு எங்களுக்குத் தேவை இல்லை எனும் இருமாப்பின் பி.ஜே.பி தங்களின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கச் செய்கின்ற ராமர் கோவில் கட்டுதல், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றுதல், பொது சிவில் சட்டம் கொண்டு வருதல், கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் போன்றவைகளை தங்களின் தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு சரியான பாடம் புகட்டும் வகையில் நம்முடைய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் பி.ஜே.பிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இவ்விஷயத்தில் நமக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து,ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

4. துஆச் செய்ய வேண்டும்.

عن ابْن عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلَاءِ الدَّعَوَاتِ لِأَصْحَابِهِ: «اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا» ت : 3502

முடிவுரை: அல்லாஹ் முஸ்லிம்களின் சிந்தனைகளை ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை ஏற்படுத்தித்தருவானாக