ஞாயிறு, 19 ஜூலை, 2020

தற்போதைய சூழலில் குர்பானி பற்றிய முக்கியச் சட்டங்கள்.


سم الله الرحمن الرحيم.

தற்போதைய சூழலில் குர்பானி பற்றிய முக்கியச் சட்டங்கள்.
***************************************************************


கேள்வி : 1.
குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையா?

பதில்:
ஹனஃபீ மத்ஹபின் படி குர்பானி கடமையானவர்கள் குர்பானியை நிறைவேற்றுவது வாஜிப் என்னும் கட்டாயக் கடமையாகும். 

 فتجب الأضحية علي حر مسلم مقيم موسر عن نفسه لا من طفله شاة أو بدنة
 (الدر المختار ٢/٢٣١)

மற்ற மத்ஹப்களில் குர்பானி சுன்னத் முஅக்கதாவாகும் கட்டாயமல்ல. எனினும் வசதியுள்ளவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது 

قال الأمام الشافعي رح : "الضحايا سنة لا أحب تركها"
(كتاب الأم : ٢/٢٤٣)
قال الأمام مالك رح : "الأضحية سنة وليست بواجبة ولا أحب لأحد ممن قوي علي ثمنها ان يتركها" (الموطأ ٢/٤٨٧)

கேள்வி :
குர்பானி யாரின் மீது கடமையாகும்?

பதில்  : 
ஸதகதுல் ஃபித்ர் கொடுப்பது யாரின் மீது கடமையோ அவரின் மீது குர்பானி கொடுப்பது வாஜிபாகும். 
அதாவது துல்ஹஜ் பிறை 10,11,12  ஆகிய மூன்று நாட்களில் அத்தியாவசியத் தேவைகள் போக எவரிடம் 612.5 கிராம் வெள்ளியோ, 87.5 கிராம் தங்கமோ அல்லது அவர் குடியிருக்கும் வீடு, வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள், பயன்படுத்தும் வாகனம் போக, உபரியான மற்ற பொருட்களோ வியாபாரச் சரக்குகளோ, அல்லது பணமோ 612.5 கிராம் வெள்ளியின் மதிப்பளவு இருந்தால் குர்பானி கடமையாகி விடும்.

وأما شرائط الوجوب : منها اليسار وهو ما يتعلق به وجوب صدقة الفطر 
(الفتاوي الهندية ٥/٢٩٢)

والموسر في ظاهر الرواية : من له مئتا درهم أو عشرون دينارا أو شيئ يبلغ ذلك سوي مسكنه ومتاع مسكنه و مركوبه وخادمه التي لا يستغني عنها
 ( الهندية ٥/٢٩٢)

கேள்வி  : 3 .
 குர்பானி பிராணியை வாங்கிய பின் அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் என்ன சட்டம்?

பதில்:
குர்பானியுடைய மூன்று நாட்களும் முடிந்து விட்டது. அப்பிராணியை அறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் இப்போது அதனை அப்படியே சதகா செய்து விட வேண்டும். அல்லது அதன் கிரயத்தை சதகா செய்து விட வேண்டும். 

لو اشتري شاة الأضحية عن نفسه أو عن ولده فلم يضح حتي مضت أيام النحر كان عليه أن يتصدق بتلك الشاة أو بقيمتها
(الخانية - ٣/٢٤٣)  

ان الشاة المشتراة للأضحية اذا لم يضح بها حتي مضت الوقت يتصدق الموسر بعينها حية كاالفقير  (رد المختار - ٩/٤٦٥)

கேள்வி:
தன் குர்பானியை நிறைவேற்றும் பொறுப்பை (வெளியூரிலோ வெளிநாட்டிலோ உள்ள) வேறு ஆளிடம்  ஒப்படைக்கலாமா

பதில்
ஆம் : தாராளமாக கூடும். தான் வாங்கிய குர்பானிப் பிராணியையோ அல்லது அதற்குரிய பணத்தையோ வேறொருவரிடம் ஒப்படைப்பது கூடும் . 

ثم بعث بها الى البيت وفي روايه مع ابي..
நபி(ஸல்) அவர்கள் தன் உள்ஹிய்யா ஒட்டகத்தை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவரிடத்தில் கொடுத்து மக்காவுக்கு அனுப்பினார்கள் (புகாரி 1699)

ومنها أن تجزئ فيها النيابة فيجوز للانسان أن يضحي بنفسه وبغيره باذنه (بدائع الصنائع 4/200).

கேள்வி 5. 
குர்பானி பிராணியை வாங்கவுமில்லை குர்பானியுடைய நாட்களில் குர்பானியும் கொடுக்க முடியவில்லையெனில் என்ன செய்வது.

பதில்
குர்பானி கொடுக்க முடியாவிட்டால் அதை அறுக்க அனுமதிக்கப்பட்ட நாட்கள் கழிந்த பின்பு அதனுடைய விலையை ஸதகா செய்வது வாஜிபாகும்

ولو تركت التضحية ومضت ايامها تصدق بها حية ناذر۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ الى قوله وإن لم يشتري مثلها حتى مضت ايامها تصدق بقيمتها لأن الاراقة انما عرفت قربة في زمان مخصوص (فتاوي شامي9/463)

من وجبت عليه الاضحية فلم يضح حتى مضت أيام النحر فقد وجب عليه التصدق بقيمه شاة (بدائع الصنائع)4/203

கேள்வி:
அவ்வாறு சதகா செய்யும்போது முழு ஆட்டுடைய கிரயமா அல்லது மாடு அல்லது ஒட்டகத்தின் ஏழில் ஒரு பங்கு விலையா ?

பதில்:
குர்பானி கொடுக்க முடியாததால் அந்த நாட்கள் முடிந்த பின்பு நடுத்தரமான ஒரு ஆட்டின் விலையை ஸதகா செய்ய வேண்டும் .
பெரிய பிராணியின் ஏழில் ஒரு பங்கு தொகையை ஸதகா செய்வது போதுமாகாது.
அஹ்ஸனுல் ஃபதாவா 7/270 & 
  ஃபதாவா தேவ்ந்த்15/513 &   ஃபதாவா  காஸிமிய்யா.
22/243 .244

இதற்குரிய மூல ஆதாரங்கள் முந்திய கேள்வியின் பதிலில் கூறப்பட்டுள்ளன.

 எனினும் சில உலமாக்கள் பெரிய பிராணியின் ஏழில் ஒரு பங்கு கிரயத்தை ஸதகா செய்வதும் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
(கிஃபாயதுல் முஃப்தி 8/212)

والغنى يتصدق بقيمتها أي قيمة ما يصلح للتضحية كما في الخلاصه او قيمتة شاة وسط كما في الزاهد وغيره
الدر المنتقى مع الجمع (2/171)

ஆனாலும் அந்த கிரையம் நடுத்தரமான ஒரு ஆட்டின் விலையைவிட குறையாமல் இருக்க வேண்டும். 

நடுத்தரமான ஆட்டின் விலையைவிட பெரிய பிராணியின் ஏழில் ஒரு பங்கு தொகை குறைவாக இருக்குமேயானால் அப்போது ஆட்டின் விலையை சதகா செய்வதே சிறந்ததாகும்.


கேள்வி :7
குர்பானியின் நாட்களுக்கு முன்பே குர்பானிபிராணியின் தொகையை (ஆடு அல்லது கூட்டு குர்பானி கிரயத்தை) ஸதகா செய்வது கூடுமா?

பதில்:
கூடாது . ஏனெனில் குர்பானி கடமையானவர் அதன் மூன்று நாட்களில் குர்பானியை நிறைவேற்றுவது கொண்டு மட்டுமே தன்மீதுள்ள கடமையை நிறைவேற்றியவராக ஆவார். அவ்வாறின்றி குர்பானியின் நாட்களுக்கு முன்பே குர்பானி பிரானியின் தொகையை ஸதகா செய்துவிட்டால் அவர்மீதுள்ள குர்பானியின் கடமை நீங்காது.
ومنها لايقوم غيرها مقامها في الوقت حتي لوتصدق بعين الشاة اوقيمتها في الوقت لايجزئه عن الأضحية لان الوجوب تعلق بالاراقة والاصل ان الوجوب اذا تعلق بفعل معين انه لايقوم غيره مقامه كما في الصلاة والصوم وغيرهما  (بدائع الصنائع 6/264)

கேள்வி: 8
குர்பானி கொடுப்பது பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான்.
ஆனால் ஏதேனும் காரணத்தால்  பெருநாள் தொழுகை நடைபெறாவிட்டால் குர்பானியை எப்போது நிறைவேற்ற வேண்டும் ?

பதில்: 
பெருநாள் தொழுகை கடமையுள்ள ஊராக இருந்து ஏதேனும் காரணமாக ஈத் தொழுகை நடைபெறாவிட்டால் சூரியன் உச்சி சாய்ந்த  பின்னரே குர்பானி கொடுக்க வேண்டும்.
وأول وقتها بعد الصلاة ان ذبح في مصر ..... وبعد مضي وقتها لولم يصلوا لعذر      (فتاوي شامي 9/386)

கேள்வி 9
நேர்ச்சையுடைய  நிய்யத்துள்ளவர்  கூட்டு  குர்பானியில் பங்கு வகிக்கலாமா?

பதில்:
நேர்ச்சையுடைய  நிய்யத்துள்ளவர்  கூட்டு  குர்பானியில் பங்கு வகிக்கலாம்.  ஆனால் அவருடைய பங்கின்  இறைச்சி முழுவதையும்  ஏழைகளுக்கு மட்டுமே ஸதகா செய்வது வாஜிபாகும்.


وَقَدْ ذُكِرَ فِي بَعْضِ الرِّوَايَاتِ «عَلَى كُلِّ مُسْلِمٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةٌ وَعَتِيرَةٌ» وَيَسْتَوِي إنْ كَانَ قَصْدُهُمْ جَمِيعًا التَّضْحِيَةَ، أَوْ قَصَدَ بَعْضُهُمْ قُرْبَةً أُخْرَى عِنْدَنَا، وَعِنْدَ زُفَرَ لَا يَجُوزُ إلَّا إذَا قَصَدُوا جَمِيعًا التَّضْحِيَةَ (المبسوط للسرخسى)

கேள்வி 10
ஒரு விரை இருக்கும் ஆட்டை குர்பானி கொடுக்கலாமா?

பதில்:
தாராளமாக கூடும்

இரு விரையும் நீக்கம் செய்யப்பட்ட அல்லது காயடிக்கப்பட ஆடு குர்பானி கொடுப்பதே கூடும் என்ற சட்டத்தின் அடிப்படையில் ஒரு விரை நீக்கம் செய்யப்பட்டதும் கூடும்

فعامةُ أهل العلم على جواز التضحيةِ بالخصي وهو ذاهب الخُصيتين، والموجوء وهو مرضوض الخُصية، وإذا كانت التضحيةُ بالخصيِّ والموجوء جائزة فالتضحيةُ بذاهبِ إحدى الخُصيتين أو مرضوضها أولى بالجواز.
وعليه؛ فالتضحيةُ بما ذكرَ في السؤال جائزةٌ بلا كراهة، فعن أبي رافع قال: ضحى رسول اللّه صلى اللّه عليه وآله وسلم بكبشين أملحين موجوأين خصيين‏‏‏.‏ 
 وعن عائشة قالت: ‏‏ضحى رسول اللّه صلى اللّه عليه وآله وسلم بكبشين سمينين عظيمين أملحين أقرنين موجوأين‏‏‏.‏ رواهما أحمد
______________________


ایک خصیہ والے جانور کی قربانی جائز ہے۔
فتاوی محمودیہ میں ہے:
’’سوال : ایک فوطہ والے جانور کی قربانی درست ہے یا نہیں؟
جواب : اس کی بھی قربانی درست ہے‘‘۔ (۱۷ / ۳۵۳، دار الافتاء جامعہ فاروقیہ کراچی) فقط واللہ اعلم


தொகுப்பு: தாவூதி ஆலிம்கள் ஃபிக்ஹ் ஆய்வுக்குழு



வியாழன், 6 பிப்ரவரி, 2020

இஸ்லாத்தின் பார்வையில் கொரானா வைரஸ்.


بسم الله الرحمن الرحيم
இஸ்லாத்தின் பார்வையில் கொரானா வைரஸ்.
****************************
الحمد لله، نحمده ونستعينه، ونستغفره ونؤمن به، ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله.

முன்னுரை: உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் மட்டும் 6 ஆயிரத்து 78 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 நாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது.

ஊஹான் உள்ளிட்ட17 நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு சீன அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை சாத்தான் என்று குறிப்பிட்டுள்ள சீன அதிபர்  ஜின்பிங் இந்தப் போரில் வெற்றிபெறுவதற்கு தங்களது பங்களிப்பை அளிக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து வெளியேறிய பல நாட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில்  ஊஹான் மாகாணத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஊஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது.

விலங்குகளுடன் சீனவர்கள் நெருக்கமானவர்கள் என்பதால் ஊஹானில் இந்த வைரஸ் விரைவாக பரவத் தொடங்கியுள்ளது.  ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவது எப்படி...?
கொரோனா வைரஸ் தும்மல் இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும்.

என்ன பாதிப்பை ஏற்படுத்தும்...?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு வறட்டு இருமலை உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. (செய்தி தொகுப்பிலிருந்து)

இப்படியாக கொரோனா வைரஸ் குறித்து உலகமே அதிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அல்லாஹ் நமக்கு இவ்வுலகில் வழங்கியுள்ள மாபெரும் அருட்கொடை வாழ்க்கையாகும். ஏனெனில் இவ்வாழ்க்கையைப் பயன்படுத்தியே ஒவ்வொருவரும் தான் விரும்பியதை அடைய முடியும். குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் நமது இலக்கான மறுமையில் சுவனத்தையும், அதன் பின் அல்லாஹ்வின் தரிசனத்தையும் அடைய முடியும். இவ்வாய்ப்பு இல்லையெனில் எங்கனம் நன்மைகள் செய்வது? சுவனத்தை அடைவது? அல்லாஹ்வை தரிசிப்பது? எனவே நமது இலக்குகள் அனைத்தையும் பெற வாழ்க்கை எனும் அருட்கொடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவேதான் இவ்வருட்கொடையினை வழங்கி மேலும் அது தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்த அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (21) الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ (البقرة : 21 -22)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ (الأعراف : 10)

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.

ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.
************
வாழ்ந்தால் மட்டும் போதுமா? அதனால் நாம் பெற வேண்டிய பலன்களை பெற்று விட முடியுமா? என்றால் இல்லை. நல் வாழ்க்கை வாழ வேண்டும். நல் வாழ்க்கையின் மூலமே நாம் விரும்பும் நன்மைகளை அடைய முடியும். நல்வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கமே ஆரோக்கியமாகும்.  ஏனெனில் ஆரோக்கியம் இல்லையெனில் இவ்வுலகில் நாமே நமக்கும் மற்றவர்களுக்கும் சிரமமாகி விடுவோம். ஆதலால் நோயற்ற வாழ்க்கை மிகவும் முக்கியமாகும்.

عن مُعَاذِ بْنَ رِفَاعَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، قَالَ: قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، عَلَى المِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الأَوَّلِ عَلَى المِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ: «اسْأَلُوا اللَّهَ العَفْوَ وَالعَافِيَةَ، فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ اليَقِينِ خَيْرًا مِنَ العَافِيَةِ».

ரிஃபாஆ (ரழி) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரழி) அவர்கள் மிம்பரின் நின்று அழுதார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி) முதலாம் ஆண்டில் மிம்பரின் நின்று அழுதார்கள். பின்னர் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பையும் ஆரோக்கி(வளத்)தையும் கேளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவரொறுவரும் ஈமானுக்குப்பின் ஆரோக்கியத்தை விட சிறந்தவற்றை வழங்கப்படுவதில்லை என்று கூறினார்கள். (திர்மிதி: 3558)

நோய்:
*******
நோயை தருபவன் அல்லாஹ்தான் என்றாலும், அதற்கான காரணங்கள் பல உள்ளன.

நோய் எப்படி தாக்குகின்றது?

1. தனி மனிதனின் தவறால் நோய் ஏற்பாடலாம்.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட புகைத்தல், மது அருந்துதல், தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் நோய் ஏற்படுகின்றன.

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ (الشوري : 30(

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.

2. சமூகத்தின் தவறால் நோய் ஏற்பாடலாம்.

மனிதனின் ஜீவாதாரமாக உள்ள உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளில் மனிதனை மருதுவாக கொல்லும் நஞ்சை ஒரு சமூகமோ அல்லது அரசோ இணைக்கும் போதும், இரவில் வேலை செய்தல் உள்ளிட்ட தவறான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நோய் ஏற்படுகின்றது.

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ [لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ(الرُّومِ:41)

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சவைக்கும்படி அவன் செய்கிறான்.

3. அல்லாஹ்வின் சோதனையினாலோ அல்லது தண்டனையினாலோ நோய் ஏற்படலாம்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ (البقرة : 155 -167)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِنْ قَبْلِكَ فَأَخَذْنَاهُمْ بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ (42) فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِنْ قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ (الأنعام :  43(

(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ (132) فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ (133)
அவர்கள் மூஸாவிடம், ''நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை'' என்று கூறினார்கள்.
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.

عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ، مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ، وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا، فِرَارًا مِنْهُ»  خ : 3473

ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி) 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்' என்று கூறினார்கள்' என்று பதிலளித்தார்கள்.

மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்?
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَامُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ (134) فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ إِلَى أَجَلٍ هُمْ بَالِغُوهُ إِذَا هُمْ يَنْكُثُونَ (135(

தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் ''மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்'' என்று கூறினார்கள்.
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.

தொற்று நோய் உண்டா?
***************
இஸ்லாமிய மார்க்கத்தில் தொற்று நோய் என்பது கிடையாது.

عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ» فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا بَالُ إِبِلِي، تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيَأْتِي البَعِيرُ الأَجْرَبُ فَيَدْخُلُ بَيْنَهَا فَيُجْرِبُهَا؟ فَقَالَ: «فَمَنْ أَعْدَى الأَوَّلَ؟» خ: 5717

அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர் 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள்.

தொற்று நோய் இல்லையெனில் நோய் தொற்று ஏன் ஏற்படுகின்றது? எனும் கேள்விக்கு நிகழ்கால மருத்துவர்கள் தரும் விளக்கம் என்னவெனில் ஒவ்வொரு கிருமிக்கும் ஒரு அழிக்கும் ஆற்றல் இருக்கவே செய்யும். யாருடைய உடலில் அதனை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையோ அவர்களைத்தான் அக்கிருமி தாக்குகின்றன. நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களுக்கு அக்கருமிகளால் யாதொரு பிரச்சனையுமில்லை.
ஒருவாதத்திற்கு தொற்று நோய் உண்டு என்று ஒப்புக் கொண்டால் அந்நோயாளிகளுக்கு சிகிச்ளையளிக்கும் மருத்துவர்களுக்கும், அவ்வூரில் வசிக்கும் மற்றவர்களுக்கும் ஏன் தொற்றுவதில்லை என்ற கேள்விகளுக்கு என்ன பதில்?

தீர்வு என்ன?

1. மருத்துவம் செய்தல்:

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ' نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً، أَوْ قَالَ: دَوَاءً إِلَّا دَاءً وَاحِدًا ' قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُوَ؟ قَالَ: «الهَرَمُ»: ت : 2038

உஸாமா பின் ஷரீக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கிராமத்தினர் (நபியவர்களிடத்தில்) அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சிகிச்சை செய்து கொள்ள வேண்டாமா? என்று கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள். ஆம். அல்லாஹ்வின் அடியார்களே! சிகிச்சை செய்து கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் ஒரே ஒரு நோயைத் தவிர வேறுஎந்நோயையும் அதற்குறிய மருந்தில்லாமல் உருவாக்குவதில்லை. என்று கூறினார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அது எது? என்று கேட்க, அதற்கு நபியவர்கள் வயோதிகம் என்று பதிலலித்தார்கள். (திர்மிதி: 2038)

2. அவ்வூரார்கள் அவ்வூரை விட்டு வெளியேறாமலும், வெளியூரார்கள் அவ்வூருக்குள் நுழையாமல் இருத்தல் வேண்டும்.

عن  أُسَامَةَ بْنَ زَيْدٍ، يُحَدِّثُ سَعْدًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا سَمِعْتُمْ بِالطَّاعُونِ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا» فَقُلْتُ: أَنْتَ سَمِعْتَهُ يُحَدِّثُ سَعْدًا، وَلاَ يُنْكِرُهُ؟ قَالَ: نَعَمْ. خ : 5728

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، خَرَجَ إِلَى الشَّأْمِ، حَتَّى إِذَا كَانَ بِسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الأَجْنَادِ، أَبُوعُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ وَأَصْحَابُهُ، فَأَخْبَرُوهُ أَنَّ الوَبَاءَ قَدْ وَقَعَ بِأَرْضِ الشَّأْمِ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لِي المُهَاجِرِينَ الأَوَّلِينَ، فَدَعَاهُمْ فَاسْتَشَارَهُمْ، وَأَخْبَرَهُمْ أَنَّ الوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّأْمِ، فَاخْتَلَفُوا، فَقَالَ بَعْضُهُمْ: قَدْ خَرَجْتَ لِأَمْرٍ، وَلاَ نَرَى أَنْ تَرْجِعَ عَنْهُ، وَقَالَ بَعْضُهُمْ: مَعَكَ بَقِيَّةُ النَّاسِ وَأَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلاَ نَرَى أَنْ تُقْدِمَهُمْ عَلَى هَذَا الوَبَاءِ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُوا لِي الأَنْصَارَ، فَدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ، فَسَلَكُوا سَبِيلَ المُهَاجِرِينَ، وَاخْتَلَفُوا كَاخْتِلاَفِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لِي مَنْ كَانَ هَا هُنَا مِنْ مَشْيَخَةِ قُرَيْشٍ مِنْ مُهَاجِرَةِ الفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ مِنْهُمْ عَلَيْهِ رَجُلاَنِ، فَقَالُوا: نَرَى أَنْ تَرْجِعَ بِالنَّاسِ وَلاَ تُقْدِمَهُمْ عَلَى هَذَا الوَبَاءِ، فَنَادَى عُمَرُ فِي النَّاسِ: إِنِّي مُصَبِّحٌ عَلَى ظَهْرٍ فَأَصْبِحُوا عَلَيْهِ. قَالَ أَبُوعُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ: أَفِرَارًا مِنْ قَدَرِ اللَّهِ؟ فَقَالَ عُمَرُ: لَوْ غَيْرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيْدَةَ؟ نَعَمْ نَفِرُّ مِنْ قَدَرِ اللَّهِ إِلَى قَدَرِ اللَّهِ، أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ إِبِلٌ هَبَطَتْ وَادِيًا لَهُ عُدْوَتَانِ، إِحْدَاهُمَا خَصِبَةٌ، وَالأُخْرَى جَدْبَةٌ، أَلَيْسَ إِنْ رَعَيْتَ الخَصْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ، وَإِنْ رَعَيْتَ الجَدْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ؟ قَالَ: فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ - وَكَانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حَاجَتِهِ - فَقَالَ: إِنَّ عِنْدِي فِي هَذَا عِلْمًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ» قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ ثُمَّ انْصَرَفَ.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 59 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். 60 அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அவர்களில் சிலர் 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர் 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள்.
அப்போது உமர்(ரலி) 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.
அப்போதும் உமர்(ரலி) 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகுஇ மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்) 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர்.
எனவே உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க உமர்(ரலி) 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறெவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால் செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள் அல்லவா?' என்று கேட்டார்கள்.
அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள் 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.
உடனே உமர்(ரலி) (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

3. பாவமன்னிப்பு கோருதல்:
4. நிவாரணம் வேண்டி துஆச் செய்தல்.
5. நோயால் பாதிக்கப்படாதவர்கள் பின் வரும் துஆவை ஓத வேண்டும்.


عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَنْ رَأَى صَاحِبَ بَلَاءٍ، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا، إِلَّا عُوفِيَ مِنْ ذَلِكَ البَلَاءِ كَائِنًا مَا كَانَ مَا عَاشَ '،: ت : 3431
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சோதிக்கப்பட்டவரை கண்டவர் الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا என்று கூறினால் அவர் வாழும் காலமெல்லாம் அச்சோதனையிலிருந்து நிவாரணமளிக்கப்பட்டுவிடுவார்.